நூல்முகம்
ஒரு நூல் பழைமையானது என்பதை வைத்தே அது சிறந்ததாகத்தான் இருக்கும் என்று முடிவு செய்தல் கூடாது. அவ்வாறே, இன்று தோன்றிய நூல்தானே என்று கருதி ஒன்றைக் குறைவாக மதிப்பிடுதலும் கூடாது. இத்திறனாய்வுக் கருத்தினை வெளியிட்டிருப்பவர் அறுநூறு ஆண்டுகளுக்கு முன்னே வாழ்ந்தவராகிய ஒரு சைவப் பெரியார் என்று கூறினால் பலரும் வியப்படைதல் கூடும். ஆம், அவர்தான் உமாபதி சிவம். மெய்கண்டாரோடு தொடங்கிய சைவ சித்தாந்த ஆசாரிய பரம்பரையில் நான் காம் ஆசிரியராக வந்தவர் அவர். மெய்கண்டார் செய்தருளிய சிவஞான போத நூலுக்குச் சார்பாகச் சிவப்பிரகாசம் என்ற நூலைச் செய்தவர். அந்நூலில்தான் அவர் மேற்குறித்த கருத்தினை வெளியிட்டுள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக