வெள்ளி, 3 நவம்பர், 2017

சிவப்பிரகாசமும் திருவருட் பயனும்

சிவப்பிரகாசமும் திருவருட் பயனும்

உமாபதி சிவம் செறிவும் திட்ப நுட்பமும் அமையத் தாம் செய்த சிவப்பிரகாச நூலைச் சைவ வுலகம் விளங்கிக் கொள்ளுதற்குத் துணையாகும்படி மற்றொரு சிறந்த நூலையும் ஆக்கி அளித்தார். அதுவே இந்தத் திருவருட்பயன் எனும் நூல். சிவப்பிரகாசம் சிவாகமம் ஆகிய கடலைக் கடத்தற்கு உதவும் மரக்கலம் போன்றது. திருவருட்பயன் அம் மரக்கலத்தைச் செலுத்தும் மாலுமி போன்றது என்பர். மாலுமி இல்லாத மரக்கலம் திசைகெட்டுத் தடுமாறும். அதுபோல முன்னே திருவருட் பயனைப் பயிலாமல் அதன் உதவியின்றிச் சிவப்பிரகாசத்தைக் கற்கப் புகுந்தால் அக்கல்வி தெளிவைத் தராது; முழுமை பெறாது. சிவப்பிரகாசமும் திருவருட் பயனும் இணைந்து செல்பவை. பெயரிலும் அவை ஒற்றுமை உடையவை. சிவப்பிரகாசம் என்பது சிவனது ஒளி எனப் பொருள்பட்டுத் திருவருளையே குறிப்பதாகும்.

கருத்துகள் இல்லை:

திருமூலர் திருமந்திரம் - 275 - விளக்கம்

பாடல் விளக்கம்: மெய்தான் அறியும் செழுங்கடல் வட்டத்துப் பொய்தான் மிகவும் புலம்பும் மனிதர்கள் மெய்தான் உரைக்கில்விண் ணோர்தொழச் செய்குவன் ம...