புதன், 8 நவம்பர், 2017

நறுந்தொகை - கடவுள் வாழ்த்து

கடவுள் வாழ்த்து

பிரணவப் பொருளாம் பெருந்தகை ஐங்கரன்
சரண அற்புதமலர் தலைக்கணி வோமே

(பதவுரை)

பிரணவம் - பிரணவ மந்திரத்தின்; பொருள் ஆம் - அருத்தமாகிய,பெருந்தகை - பெருந்தன்மையுடைய, ஐங்கரன் - ஐந்து கைகளை யுடையவராகிய விநாயகக் கடவுளின், சரணம் - திருவடியாகிய, அற்புதம்அதிசயமிகுந்த, மலர் - செந்தாமரை மலரை,தலைக்குஅணிவோம் - தலையில் சூடிக்கொள்வோம் என்றவாறு

(பொழிப்புரை)

பிரணவ மந்திரத்தின் பொருளாகிய விநாயகக்கடவுளின் திருவடிகளை வணங்குவோம் என்றவாறு.  பிரணவம் எல்லாமந்திரங்களுக்கும்வேதத்திற்கும் முதலாக வுள்ளது யாம்என்னும் எழுவாய் தொக்குநின்றது; : ஈற்றசை


1 கருத்து:

Unknown சொன்னது…

மாணவர்கள் ஊட்டப்படவேண்டிய அறிவை வளர்க்க கூடிய தமிழ்அமிர்தம் மறுக்கப்பட்டு ஆங்கில நஞ்சு திணிக்கப்படுகிறது.விரைவில் தமிழனால் இந்த இழிநிலை மாறும் சிவாய நம...

திருமூலர் திருமந்திரம் - 275 - விளக்கம்

பாடல் விளக்கம்: மெய்தான் அறியும் செழுங்கடல் வட்டத்துப் பொய்தான் மிகவும் புலம்பும் மனிதர்கள் மெய்தான் உரைக்கில்விண் ணோர்தொழச் செய்குவன் ம...