கடவுள் வாழ்த்து
பிரணவப் பொருளாம் பெருந்தகை ஐங்கரன்
சரண அற்புதமலர் தலைக்கணி வோமே
சரண அற்புதமலர் தலைக்கணி வோமே
(பதவுரை)
பிரணவம் - பிரணவ மந்திரத்தின்; பொருள் ஆம் - அருத்தமாகிய,பெருந்தகை - பெருந்தன்மையுடைய, ஐங்கரன் - ஐந்து கைகளை யுடையவராகிய விநாயகக் கடவுளின், சரணம் - திருவடியாகிய, அற்புதம் - அதிசயமிகுந்த, மலர் - செந்தாமரை மலரை,தலைக்குஅணிவோம் - தலையில் சூடிக்கொள்வோம் என்றவாறு.
(பொழிப்புரை)
பிரணவ மந்திரத்தின் பொருளாகிய விநாயகக்கடவுளின் திருவடிகளை வணங்குவோம் என்றவாறு. பிரணவம் எல்லாமந்திரங்களுக்கும், வேதத்திற்கும் முதலாக வுள்ளது யாம்என்னும் எழுவாய் தொக்குநின்றது; ஏ : ஈற்றசை
1 கருத்து:
மாணவர்கள் ஊட்டப்படவேண்டிய அறிவை வளர்க்க கூடிய தமிழ்அமிர்தம் மறுக்கப்பட்டு ஆங்கில நஞ்சு திணிக்கப்படுகிறது.விரைவில் தமிழனால் இந்த இழிநிலை மாறும் சிவாய நம...
கருத்துரையிடுக