புதன், 8 நவம்பர், 2017

நறுந்தொகை - நூற்பயன்

நூற்பயன்

வெற்றி வேற்கை வீர ராமன்
கொற்கை யாளி குலசே கரன்புகல்
நற்றமிழ் தெரிந்த நறுந்தொகை தன்னால்
குற்றங் களைவோர் குறைவிலா தவரே.

(பதவுரை)
கொற்கை - கொற்கை யென்னும் நகரை, ஆளிஆள்பவனும்,குலசேகரன் -தன்குலத்திற்கு முடி போல்பவனும் ஆகிய,வெற்றி வேல் கை -வெற்றி பொருந்திய வேலினை யேந்திய கையையுடையவீரராமன் - அதிவீரராம பாண்டியன், புகல்சொல்லிய, நல் தமிழ் தெரிந்த - நல்ல தமிழில் விளக்கமுற்ற,நறுந்தொகைதன்னால்நறுந்தொகை யென்னும் இந்நீதி நூலால், குற்றம் களைவோர்குற்றத்தைப் போக்குவோர், குறைவு இலாதவர்சிறுமை இல்லாதவராவர் ( - று.)

(பொ-ரை)
கொற்கை நகரதிபனும் குலத்திற்கு மகுடம் போன்றவனுமாகிய அதிவீர ராமபாண்டியன் கூறிய நறுந்தொகை யென்னும் இந்நீதி நூலைக் கற்றுக்குற்றத்தைப் போக்கிக் கொள்வோர் ஒரு குறையும் இல்லாதவராவர் ( - று.)
நறுந்தொகை யென்பதற்கு நல்ல நீதிகளைத் தொகுத்திருப்பது என்பது பொருள். இதுவே இந்நூலின் பெயர். இச்செய்யுளின் முதலில் 'வெற்றிவேற்கை' என்னுந்தொடர் இருத்தலால், அதனாலும் இந்நூலை வழங்குவர். - ஈற்றசை.

கருத்துகள் இல்லை:

திருமூலர் திருமந்திரம் - 275 - விளக்கம்

பாடல் விளக்கம்: மெய்தான் அறியும் செழுங்கடல் வட்டத்துப் பொய்தான் மிகவும் புலம்பும் மனிதர்கள் மெய்தான் உரைக்கில்விண் ணோர்தொழச் செய்குவன் ம...