54. உயிர் அருளோடு சேர்ந்து வாழும் ஒற்றுமை
ஊன் உயிரால் வாழும் ஒருமைத்தே; ஊனொடு உயிர்
தான் உணர்வோடு ஒன்றாம் தரம்.
தான் உணர்வோடு ஒன்றாம் தரம்.
பொருள் : உடம்போடு சேர்ந்து நிற்பதாகிய உயிர் நிறைந்த ஞானமாகிய திருவருளோடு பிரிப்பின்றிக் கூடி வாழ்கிறது. திருவருளோடு உயிர் சேர்ந்து வாழும் ஒற்றுமை எது போன்றது எனில், உயிரோடு கூடி வாழும் உடம்பு அந்த உயிரோடு கொண்டுள்ள ஒற்றுமையைப் போன்றது ஆகும்.
சொற்பொருள் :
ஊனொடு உயிர் - உடம்போடு கூடி நிற்பதாகிய உயிர்
தான் - தான்
உணர்வோடு - அறிவு வடிவான திருவருளோடு
ஒன்றாம் தரம் - ஒன்றுபட்டு வாழும் நிலை
ஊன் - உடம்பானது
உயிரால் - உயிரோடு
வாழும் - கூடி வாழும்
ஒருமைத்து - ஒற்றுமையை ஒப்பதாகும்.
தான் - தான்
உணர்வோடு - அறிவு வடிவான திருவருளோடு
ஒன்றாம் தரம் - ஒன்றுபட்டு வாழும் நிலை
ஊன் - உடம்பானது
உயிரால் - உயிரோடு
வாழும் - கூடி வாழும்
ஒருமைத்து - ஒற்றுமையை ஒப்பதாகும்.
விளக்கம் :
உயிர் உடம்பிற் கலந்து தான் சிறிதும் புலப்படாமல் உடம்பே உள்ளது என்று சொல்லும்படி அதனோடு ஒற்றுமைப்பட்டு நிற்கிறது. உயிரும் உடம்பும் பொருளால் இரண்டு என்ற தன்மை அங்கே இல்லை. இவ்வாறு இரு பொருள்கள் பிரித்தறிய வாராதபடி இயைந்து நிற்பின் அந்த ஒற்றுமைத் தொடர்பு அத்துவித சம்பந்தம் என்று சொல்லப்பெறும். இம்முறையில் உடம்பு உயிரோடு கூடி நிற்பதாகிய தொடர்பு அத்துவிதம் எனப்படுகிறது. உடம்புக்கும் உயிருக்கும் இடையே உள்ள இந்தத் தொடர்பே உயிருக்கும் திருவருளுக்கும் இடையே உள்ளது. திருவருள் உயிரில் நீக்கமறக் கலந்திருப்பினும் அதன் இருப்புச் சிறிதும் புலப்படாமல் உயிர் ஒன்றே உள்ளது என்று சொல்லு<ம்படி உயிரோடு ஒற்றுமைப்பட்டு நிற்கிறது. உடம்புக்கென்று தனியே செயலில்லை. உயிர் செலுத்தவே அது செயற்படும். அதுபோல உயிர்தானே தனித்து நின்று அறிவதில்லை. திருவருள் உள்நின்று அறிவிக்கவே உயிர் அறிவதாகும். திருவருள் இயக்கவே உயிர் செயற்படுவதாகும். சுருங்கக் கூறினால், உயிரையின்றி <உடலுக்கு வாழ்வில்லை; அதுபோலத் திருவருள் துணையின்றி உயிருக்கு வாழ்வில்லை. உயிருக்கு வாழ் முதலாகிய பொருள் அருளே என்பது இதனால் விளங்கும். உயிர் உடம்பின் உள்ளாகத் தன்னை அறிதல் போலத் தன்னுள்ளே இருப்பதாகிய திருவருளை அறிதல் வேண்டும். திருவருள் எப்பொழுதும் தன்னிடத்தே பிரிப்பின்றி உள்ளது எனவும், அறிவு விளக்கத்திற்கு அதன் துணை இன்றியமையாதது எனவும் உணர்தல் வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக